வெள்ளி, 22 மே, 2009

தொப்புள்

மூடப்பட்ட முதல்வாய்
முத்தமிடத் துடிக்கும் முகவாய்

தாயிக்கும் சேயிக்கும் முதல்உறவாய்
ஊணுக்கு உயிர்தந்த கருக்குழல்வாய்

நாபிக் கமலத்தின் திருஉருவாய்
நான்முகனும் பிறந்திட்டான் அருள்வடிவாய்

சிரித்துப் பேசாத சின்னஞ்சிறுவாய்
சினிமாத் துறைக்குமட்டும் நல்லவருவாய்

எண்சான் உடம்பிற்கு நட்ட நடுவாய்
எந்நாளும் இருந்திடும் சுட்டவடுவாய்

ஆதாமிற்கும் ஏவாளுக்கும் இல்லாதவாய்
அனுதினமும் பொய்யே சொல்லாதவாய்