ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

குற்றமென்ன.


கட்டுமரக் கலம்ஏறி
மீன்பிடிக்கச் சென்றவர்கள்
பட்டதுயர் கொஞ்சமல்ல
பட்டபாட்டை என்னசொல்ல

பட்டினியால் சாவுவந்தால்
பஞ்சமென்று சொல்லிடலாம்
எட்டிச்சென்று கேள்விகளை
எமனிடத்தில் கேட்டிடலாம்

கொட்டிவைத்த செல்வெமென
கோடிவளம் கடலினிலே
சுட்டுயிவர் பார்க்கின்றார்
மீனவரின் உடலினிலே

எல்லைதாண்டி வந்ததாக
எடுத்திங்கே இயம்புகின்றார்
கொள்ளையிட்டுச் செல்வதாக
கொடுமைகளும் புரிகின்றார்


அங்கமெல்லாம் ஊனமாக்கி
ஆழ்கடலில் பிணமாக்கி
சிங்களவன் புரிகின்ற
சீர்கேட்டை தினம்எண்ணி

கண்டுமிவர் கலங்குகின்றார்
கடிதங்களும் வரைகின்றார்
கண்ணீரும் வற்றிவிடும்
கால்வயிரும் ஒட்டிவிடும்

இவர்வரையும் மடல்மட்டும்
இறுதிவரை முட்டையிடும்
தவறிருந்தால் சொல்லிடுவீர்
தலைவணங்கி ஏற்கின்றேன்


தமிழனாகப் பிறந்ததுதான்
இவர்கள் செய்தகுற்றமா
அமிர்தமான ஆழ்கடலும்
அவலமெண்ணி வற்றிடுமா .