வியாழன், 26 நவம்பர், 2009

மாவீரர் நாள் .




அகிம்சை வழிகண்ட
அண்ணலின் வழிநின்று
உண்ணாமல் விரதமிருந்து
உயிர்நீத்த உத்தமனாம்


திலீபனின் நினைவாக
ஏற்றிவைத்த தீபமிது
கொழுந்துவிட்ட சுடரதுவும்
குளிரவில்லை இன்றுவரை


உரிமையென்ற உணர்விற்காக
தியாகமாகத் தன்னுயிரை
தாரைவார்த்த வேங்கைகளின்
நினைவுபோற்றும் நாளிதுவே



அண்ணனவர் உரையாற்ற
ஆண்டாண்டு எழுச்சியுற்று
மாண்டவர்கள் புகழ்பாடும்
மாண்புமிகு பெருநாளாம்


புதைக்கப்பட்ட மனிதரெல்லாம்
புகழோடு மறைவதில்லை
விதைக்கப்பட்ட இவர்தியாகம்
வீணாகப் போவதில்லை


வரலாற்றுப் பக்கங்களும்
வன்னிநிலப் புகழ்பாடும்
வணங்கிடுவோம் இன்னாளில்
எழுந்துவரும் எம்மினமே

துடைத்தொழிக்கத் துணிந்துவிட்ட
துன்மார்க்கக் குணம்படைத்த
தருக்கர்களின் தலைநெரித்துத்
தளைத்திடுவோம் ஓர்நாளில்

பொறுத்திருப்போம் புலிசீரும்
பொய்யாகப் போவதில்லை
போற்றிடுவோம் வீரர்களை
மாவீரர் திருநாளில்.