வெள்ளி, 19 ஜூன், 2009

இனிவரும் நூற்றாண்டே..

இனிவரும் நூற்றாண்டே
இளைஞர்களின் புத்தாண்டே


கணிப்பொறிகள் கவிபாடும்
கற்பணைகள் வழிந்தோடும்

விண்ணிலே உலா வருவோம்
வியத்தகு சாதனைகள் செய்வோம்

சுற்றும் பூமியை
சுழன்றிட வைப்போம்

சூரியப் பாதையின்
சூட்சுமம் அறிவோம்

மருந்தில்லா நோய்களை
விருந்துண்ணச் செய்வோம்

எயிட்சு என்னும் நோயை
எமனிடம் அனுப்புவோம்

மரணத்தின் வாசலை
மன்றாடி அமைப்போம்

மகத்துவம் நிறைந்திட்ட
மனிதராய் இருப்போம்

வீசும் தென்றலை
வீட்டினில் அடைப்போம்

வீதிகள் தோறும்
சோலைகள் அமைப்போம்

எந்திர வாழ்விலும்
கவிபல படைப்போம்

ஏற்றம் பெற எந்நாளும்
தமிழ் வழி நடப்போம்

பூமியைப் புரட்டி
புத்தகம் வரைவோம்

புதியதோர் உலகம்
பூத்திடச் செய்வோம்

புரட்சிகள் பல
புதுமையுடன் செய்வோம் .

தீ






தீயே உனக்குத் தீராத பசியா
மயானத்தில் நீ அறியாத மானிட ருசியா
வாழ்ந்தவர் வரவில்லை என்று
வந்தாயோ வாழைக் குருத்தழிக்க
ஏழைகளின் அடுப்பில் நீ எரியவில்லை
அநீதி செய்பவரை நீ அழிக்கவில்லை
அனாகரிகமற்ற அரசியல் கூடங்களை அணுகவில்லை
ஏடெடுத்துச் சென்ற கிள்ளைகளை எரியூட்டிவிட்டாய்
உன் செந்நிற நாக்குகளால் பிள்ளைக் கறிச் சுவைபார்த்தாய்
இனி வரும் காலம் இதுபோல் நிகழவேண்டாம்
இறைவா இதற்கு நீ தான் அருளவேண்டும் .