ஞாயிறு, 24 மே, 2009

ஆழிப்பேரலை

ஊழி பெருத்ததோ
உலகை உய்த்ததோ
ஆழி கிளர்ந்ததோ
அலைகளால் அழிந்ததோ
காளி பிறந்ததால்
தாலிகள் அறுந்ததோ
வேள்விகள் அழிந்ததால்
வேலிகள் உடைந்ததோ
சாதிகள் தெரிந்ததா
பிணசாதிகள் பார்க்கையில்
கேள்விகள் பிறந்ததோ
கேண்மைகள் புரிந்ததோ
இதுதானா இயற்கை
எப்போதுதீரும் இதன்வேட்க்கை

அகலிகை

மாமனின் சாபத்தால் கல்லாகி
ராமனின் பாதத்தால் பெண்ணானவள்

கலை மகனே

அமெரிக்க நாட்டினரின்
அரும்விருதாம் ஆசுக்கார்
எட்டாத கனியெனவே தமிழருக்கு இருந்துவந்த
கொட்டாவி விட்டவரும் வியப்பெய்து மகிழ்ச்சியுற
இரண்டாகப் பெற்றுவந்து சிறப்புற்ற ரகுமானே
இறவாத புகழடைந்த தமிழினத்தின் கலைமகனே
திசையாவும் கேட்கிறது உன்கீதம் தேன்மாரி
இசையாலே அவ்விருதை நீ பெற்றாய் நலம்வாழி
தசையாவும் சிலிர்த்தது நாங்கள் கேட்ட ஒருசெய்தி
தமிழ்பேசி அவ்விருதை பெற்றாயே புகழ்வாழ்க

முயற்சி

ஆறறிவு படைத்தமனிதா அழுவதை நிறுத்து
வீழ்ச்சியைக் கண்டு விசும்பாதே
வீழ்வது ஒன்றும் புதிதல்ல
பிறந்த குழந்தை உடனே நடப்பதில்லை
முயன்று தவழ்ந்துதான் நடக்கின்றது
முப்பருவங்களையும் அடைகின்றது
அருவியின் வீழ்ச்சி நதிகளே
அன்பின் வீழ்ச்சி அடிகளே
பதினேளுமுறை படைஎடுத்தான் கசினி
அதனை ஒருமுறை சிந்தித்துக் கவனி
எறும்பைப்பார் இயந்திரமாய் இயங்குகிறது
எதிர்வரும் மழையை எண்ணி
உணவை மண்ணில் சேர்க்கிறது
புயலின் வேகம் புறாக்களைத் தடுப்பதில்லை
புறப்பட்ட புறாக்கள் பயணத்தை நிறுத்துவதில்லை
பனிரெண்டு ஆண்டுக் கொருமுறை குருஞ்சி பூக்கிறது
பூத்தாலும் பூவுலகே மணக்கிறது
ஒவ்வொரு இரவும் விடியலை நோக்கிக் காத்திருக்கிறது
காத்திருப்பதில் வாழ்க்கை கசக்கிறது
கனிந்து வந்தால் வாழ்க்கை இனிக்கிறது
முயன்று முயன்று பார்க்கின்றாய்
முயற்சி செய்து தோற்கின்றாய்
துவழ விடாதே மனதை உயர்வாய்
வாழ்வில் ஓர் கணத்தே

பசுமரத்தாணி

ஆசிரியர் அடித்த ஆணி
அன்று அறியவில்லையே நீ
வாழ்க்கைச் சக்கரத்தின் கடையாணி
அடடா தமிழா நீ

பொன்னான வாழ்வைத்தேடி

காலையில் விழித்தோம் கதிரவனைத் தொழுதோம்
கடமைகளை முடித்தோம் கஞ்சியினைக் குடித்தோம்
கழப்பைதனை எடுத்தோம் கழணி சென்று உழைத்தோம்
வெய்யிலும் வந்தது வியர்வையும் உதிர்ந்தது
மாலையும் வந்தது மனதும் சோர்ந்தது
மாடுகளைப் பூட்டினோம் மனைசென்று மயங்கினோம்
மகன் ஒருவன் ஓடிவந்தான் மடியில் அமர்ந்து பாடுஎன்றான்
மனையாள் அவள் ஓடிவந்தாள் மகனைதூக்கி அரவணைத்தாள்
உணவு கொடுத்து உறங்க வைத்தாள்
உறவைத் தொடரஉளமுடன் வந்தாள்
பஞ்சனை தனைவிரித்தாள் மஞ்சத்திலே திளைத்தாள்
வாழ்க்கை என்பது இதுதானோ வாழ்ந்து பார்த்தால் சுவைதானோ
புலர்ந்தது பொழுது புறப்பட்டோம் புன்னகையுடன்
பொன்னான வாழ்வைத்தேடி

கண்ணீர் தேசம்



கண்ணீரைச் செந்நீராகச் சிந்துகின்ற கண்ணீர்தேசம்
குண்டுமழை பொழியும் குருதிப்புனலில் நனையும்தேசம்
ஆதிகாலம் முதல் அண்மைய காலம்வரை
அக்கிரமங்கள் நடக்கும் அநியாயதேசம்
சீதையை சிறைஎடுத்ததால் சீரழிந்த சிருங்காரதேசம்
நீதியை நிலைநாட்ட நிர்மூலமாகி வரும்தேசம்
உரிமைகள் மறுக்கப்பட்டதால் உக்கிரமானது எங்கள்நேசம்
தமிழனுக்குக் கிடையாத தன்னுரிமை வாசம்
ஒப்பணைக்கு ஒப்பாரிவைக்கும் ஓநாய்களின் வேசம்
ஊமைகளாகிப் போகினவோ உலகநாடுகளின் பாசம்
கந்தகக் கருக்கலை கருவறையில் சுமக்கும் கலியுகப்பெண்கள்
மனித வெடிகுண்டாகி மாண்டுபோகும் மானுடத்து மான்கள்
மண்ணுரிமைக்காக நித்தமும் நடக்கின்ற உயிர்பலி
உடல்சிதறி உயிர்நீத்திடும் விடுதலைப்புலி
உண்மையை உரைத்திட அனைவருக்கும் கிலி
உத்தமர்கள் உள்ளத்தில் மட்டுமே ஏற்படும்வலி
என்று பிறக்கும் எங்கள் வாழ்வுக்கு வழி

வரலாறுடைத்த வள்ளல்



இனக்கொடியை அறுத்தெடுக்க
இணையும் இரக்கமற்றவர்களின்
வன்கொடுமையை தாளாமல்
தன் குலமக்களின் அழிவை எண்ணி
உண்ணாமல் உறங்காமல்
உயிர்த்த முத்தே
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்த
வள்ளலின் வரலாறுடைத்து
முல்லைத்தீவே வாடிவரும் வேளையில்
உன் உயிரை கரியாக்கி வான் சென்ற வித்தே
உன் கொளுந்துவிட்ட தேகத்தில்
எழுந்து சுட்ட தீயாவது
மழுங்கிவிட்ட இதயங்களை உலுக்கட்டும்
நம் மானமுள்ள இனத்தின் பாதை திறக்கட்டும்
இருகிவிட்ட என்கண்ணில் ஈரமது கசியவில்லை
கருகிவிட்ட உன்னை எண்ணி கை வடித்த கண்ணீர் இது.


குளத்தூர் முத்துக்குமார் தீக்குளித்துத் தன் இன்னுயிரை தியாகம் செய்தஅன்று எழுதிய அஞ்சலி.