சனி, 22 மே, 2010

சுயமான தலைவர் .


பல்துறை வித்தகர் பண்பாளர் மாண்புகள்
சொல்லியே போற்றுவார் சொல்வீரர் _சொல்லில்
நயமுடன் ஆற்றுவார் நாடகம் பார்பார்
சுயமான தலைவர் இவர் .


இனமழித்து நம்மொழியை என்றென்றும் காப்பார்
மனமழித்து வாழ்கின்றார் மண்ணில் _மனமே
இவர்புரியும் இந்த இழிச்செயலை தவறென
எவரெல்லாம் சொல்வார் இவர்க்கு.