சனி, 31 அக்டோபர், 2009

கடற்கரை





கடல்
காதலிக்காக
மடல் எழுதிக் காத்திருக்கும்
மணல் காதலன் .

பாதச் சுவடுகள் பலபதிந்தும்
காலச் சுவடாய் இவனுள்
கரிக்கும் நீர்மங்கை .


ஊடல் கொள்ள நினைத்தவனுக்கு
சிலநேரம் உதடுமட்டும்
நனைவதுண்டு .


அலைப் புன்னகையை
வலைவீசிப் பிடிக்கக் காத்திருக்கும்
வசீகர (மீ)மானவன்.



தென்றல் தாவணி
தழுவும்போது மட்டும்
தேகம் சிலிர்க்கும் இவனுக்கு .



காதலித்தவள் கட்டி அணைத்தால்
காலமாகிப் போவார்களென்று
கண்கொண்டுக் காத்திருக்கும்
காதல் தியாகி .


மானுடக் காதலையும்
வான்கூடும் காதலையும்
தேன்கூடாய் சேகரிக்கும்
தேமதுரக் கவிஞன்.