இருக்கிறது இல்லை
இன்றுவரை நடக்கும்
இ(ம)றை விவாதம் .
அன்பென்ற படகினால்
மட்டுமே கடந்திடும்
அற்புதக்கடல் .
கருணை உணர்வினால்
கண்களைத் திறக்கும்
களங்கமில்லா ஊற்று.
பக்திப் போர்வைக்குள்
பதுங்கிக் கொண்டிருக்கும்
தத்துவ ஞானி.
ஏழைகளின் சிரிப்பில்
பூத்துக் குலுங்கும்
புனித மலர் .
கடந்து உள்ளே
செல்பவர் மட்டும்
அறிந்திடும் காரிய
ச(மு)க்தி.
கலவரங்களுக்குக் காரணமான
களங்கமில்லாத காலத்தின்
காரணி .
அறிந்திடத் துணிபவருக்கு
மட்டுமே வாய்த்திடும்
அரூபமான காட்சி .
உதவிடும் குணத்தில்
உலவிக் கொண்டிருக்கும்
உன்மத்தன்.
தூய்மை உள்ளங்களில்
குடிகொண்ட தொலைந்திடாத
இன்பம் .
புதன், 23 டிசம்பர், 2009
பள்ளிக்கூடம்.
இளமைப் பட்டாம் பூச்சிகள்
சிறகுகள் விரிக்கும்
வ(எ)ண்ணமிகுத் தோட்டம் .
அறிவை விருத்தி
செய்யும் ஆற்றல்மிகு
அனுபவச் சாலை .
ஒழுக்கம் உயர்வைப்
போதிக்கும் உன்னதக்
கலைக்கூடம்.
நாளைய தலைமுறைகளை
நடவு செய்யும்
நம்பிக்கை வயல்கள் .
கல்விக் கடவுளை
கண்களுக்குக் காட்டும்
கருணை ஆலயம் .
வியாபாரச் சந்தையாகவும்
மாறிவிட்ட விந்தைமிகு
விற்பனை .
சிறகுகள் விரிக்கும்
வ(எ)ண்ணமிகுத் தோட்டம் .
அறிவை விருத்தி
செய்யும் ஆற்றல்மிகு
அனுபவச் சாலை .
ஒழுக்கம் உயர்வைப்
போதிக்கும் உன்னதக்
கலைக்கூடம்.
நாளைய தலைமுறைகளை
நடவு செய்யும்
நம்பிக்கை வயல்கள் .
கல்விக் கடவுளை
கண்களுக்குக் காட்டும்
கருணை ஆலயம் .
வியாபாரச் சந்தையாகவும்
மாறிவிட்ட விந்தைமிகு
விற்பனை .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)