புதன், 16 செப்டம்பர், 2009

அது மட்டும் வேண்டாம் .

ஏர்பின் நின்றது உலகமென்று
பார்புகழும் வள்ளுவத்தை
படித்ததோடு சரி .

போர் ஒன்றே போதுமென
வேர் அறுக்கும் உலகில்
வேதனைக்குப் பஞ்சமில்லை

உயிர் காத்த உழவரெல்லாம்
பயிர் செய்ய வழியின்றி
பத்தினியை விற்கும் அவலம்

தொடர்ந்திடும் துயரத்திற்கு உலகே
இடம் தருவாய் என்றால்
அது மட்டும் வேண்டாம் .