திங்கள், 30 நவம்பர், 2009

உயிர்வலி.


அன்னை பெற்றெடுத்த அன்பின்வலி
ஆண்மையை வென்ற பெண்மையின்வலி
இன்பத்தில் நின்ற உண்மையின்வலி
ஈன்ற பொழுதில் உவகையின்வலி
உயிர்பெற்று வந்த ஊணுடலின்வலி
ஊர்போற்ற வேண்டிய மானுடலின்வலி
எவ்வலியும் அறியாத பூ மடலின்வலி
ஏந்திழையால் நீர்சொரிய உயிர்தலின்வலி
ஐம்பெரும் பூதங்களை அறிதலின்வலி
ஒப்பனைகள் இல்லாத முகிழ்தலின்
ஓர்நாளும் சொல்லாத பகிர்தலின்வலி
ஔவியம் பேசாத நெகிழ்தலின் வலி .