வெள்ளி, 29 மே, 2009

தழைத்திடும் தமிழினம்!

அன்பைப் போதித்த கைகளிலே
ஆயுதம் கொடுத்த கயவர்களே
எண்பை உருக்கி மண்பதைக் காத்த
எழில்குலம் அழிக்கும் நரகர்களே
முன்பே உதித்த முக்கனித் தமிழர்
முகவரி என்பதை அறிவீரோ
முடைகளின் வழிவந்த மூர்க்கன்
மகிந்தா(ஷா)சுரன் நம்படை
அழிக்க நாள்குறித்தான்
கடைவழி போகும்முன் உன்கணக்கினை
முடிப்பான் களத்தமிழ் மறவன் அறிவாயா
உன்படைகுடி வாழ்ந்திட
எம்மினம் அழிவதா எங்ஙனம் சொல்வாய் அடிமடையா
ஆரியன் வழிவந்து அரக்கனின் குடிசேர்ந்த
நரபலி நடத்தும் கலிநரனே
உன் கதையினை முடிக்க புலிவடிவெடுக்க
பிறந்திட்ட மறவன் தமிழ்ச்சிவனே
வெடிபடை கொண்டு வான்படை
நடத்தி வெந்தணல் அள்ளிவீசுகின்றாய்
பொடிபொடியாய் ஆனாலும் புத்துயிர்பெற்று
எழுந்து நடந்திடும் எம்மினமே
உன் அடிமடி கலங்கிட ஆணவம்அழிந்திட
அரும்பித் தழைத்திடும் என்தமிழினமே.