வியாழன், 11 ஜூன், 2009

கற்பு

கற்பு என்பது கால்களுக்கு இடையிலா
கண்ணகி எரித்த கந்தக முலையிலா
கலாச்சாரம் கற்பித்த கண்ணிய நடையிலா
காலச்சாரம் நூற்பித்த புண்ணிய உடையிலா
அனைவருக்கும் அமுதளிக்கும் பண்பாட்டுப் படையலா
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து சொன்ன வழியிலா
ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிவிகித சமையலா
ஆளுமைக்கு நான்என்ற அகந்தையின் மொழியிலா
அரிதாரம் பூசிவந்த அர்தமற்ற விடியலா
பரிகாரம் செய்து விட்டால் கிடைத்துவிடும் புதையலா
கற்பு என்பது வாழ்வியல் நெறி
காலங்கள் போற்றும் கனல் போன்றவரி
குறி தவறினால் இலக்கு அதுகடந்துவிடும்
நெறி தவறினால் இழுக்கு உன்னை அடைந்துவிடும் .