செவ்வாய், 1 டிசம்பர், 2009

தியாகம் .

தன்வாழ்வை இரையாக்கி
நடக்கின்ற யாகம்
தளராமல் குறைபோக்கி
சுரக்கின்ற வேகம்


கண்ணீரைத் தனதாக்கி
கடக்கின்ற மேகம்
செந்நீரைப் புனிதாக்கி
சிறக்கின்ற தேகம்


தமக்கெனவே உரித்தாக்கி
பிறக்கின்ற சோகம்
பிறர்கெனவே துயர்போக்கி
கிடைக்கின்ற யோகம்


எந்நாளும் நினைவாக்கி
வளர்கின்ற மோகம்
சொன்னாலும் மனம்தாக்கி
கிளர்கின்ற ராகம்


நல்வாழ்வை உரமாக்கி
செழிக்கின்ற போகம்
இல்வாழ்வை மரமாக்கி
இனிக்கின்ற பாகம்


யாவரையும் உறவாக்கி
கரைகின்ற காகம்
ஊணுயிரை நீராக்கி
நிறைகின்ற தாகம்

செய்தவருக்கு உயிராகி
நிலவுகின்ற அகம்
உய்தவருக்கு பெயராகி
உலவுகின்ற சுகம்


மனிதருக்கு மருந்தாகி
மகிழ்கின்ற தவம்
மாண்புகளில் சிறந்ததாகி
மலர்கின்ற தியாகம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக