புதன், 23 டிசம்பர், 2009

கடவுள் .

இருக்கிறது இல்லை
இன்றுவரை நடக்கும்
இ(ம)றை விவாதம் .


அன்பென்ற படகினால்
மட்டுமே கடந்திடும்
அற்புதக்கடல் .


கருணை உணர்வினால்
கண்களைத் திறக்கும்
களங்கமில்லா ஊற்று.


பக்திப் போர்வைக்குள்
பதுங்கிக் கொண்டிருக்கும்
தத்துவ ஞானி.


ஏழைகளின் சிரிப்பில்
பூத்துக் குலுங்கும்
புனித மலர் .


கடந்து உள்ளே
செல்பவர் மட்டும்
அறிந்திடும் காரிய
ச(மு)க்தி.


கலவரங்களுக்குக் காரணமான
களங்கமில்லாத காலத்தின்
காரணி .


அறிந்திடத் துணிபவருக்கு
மட்டுமே வாய்த்திடும்
அரூபமான காட்சி .


உதவிடும் குணத்தில்
உலவிக் கொண்டிருக்கும்
உன்மத்தன்.


தூய்மை உள்ளங்களில்
குடிகொண்ட தொலைந்திடாத
இன்பம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக