வெள்ளி, 19 ஜூன், 2009

தீ






தீயே உனக்குத் தீராத பசியா
மயானத்தில் நீ அறியாத மானிட ருசியா
வாழ்ந்தவர் வரவில்லை என்று
வந்தாயோ வாழைக் குருத்தழிக்க
ஏழைகளின் அடுப்பில் நீ எரியவில்லை
அநீதி செய்பவரை நீ அழிக்கவில்லை
அனாகரிகமற்ற அரசியல் கூடங்களை அணுகவில்லை
ஏடெடுத்துச் சென்ற கிள்ளைகளை எரியூட்டிவிட்டாய்
உன் செந்நிற நாக்குகளால் பிள்ளைக் கறிச் சுவைபார்த்தாய்
இனி வரும் காலம் இதுபோல் நிகழவேண்டாம்
இறைவா இதற்கு நீ தான் அருளவேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக