சனி, 29 டிசம்பர், 2012

அம்மா









பூப்பெய்து  நீராடி 
பூரித்து  நின்றபோது  
புனிதவதி  என்றழைத்துப் 
புன்னகையாய்  சொன்னார்கள் 

மாப்பிள்ளை  எனைப்பார்த்து
மணக்கோலம் கொண்டபோது
மாங்கல்யம் சூடிடவே 
மனைவி  ஆகிப்போனேன் 

புகுந்தவீட்டில்   மருமகளாய்
சீர்கொடுத்தத்  திருமகளாய் 
பலபெயர்கள்  எனக்குண்டு 
பட்டியலும்  கொஞ்சம்நீளும்

பள்ளியறைப்  படுக்கையிலே 
கணவனுக்குத்   தாசியாக 
பகல்பொழுதில்  வீட்டினிலே
பணிபுரியும்  வாசுகியாய் 


பேர்பெற்ற  போதிலும் 
பெரிதுவக்கவில்லை  நானும் 
யார்கொடுத்த  சாபமோ 
நீர்வடித்துச்  சொல்கின்றேன் 


ஊர்கொடுத்த  பெயர்என்ன
உண்மையிலே  தெரியுமா 
வேர்அறுந்த  சிறுக்கிக்கு 
வேறுபெயர்   மலடியாம்

என்சுரங்கண்ட  மார்பிரண்டும் 
பால்சுரக்க  வேண்டுமடா 
உன்விரல்தீண்டி   என்உயிரும்
பூப்பூக்க  வேண்டுமடா 


நான்எருக்குழியில்  போகுமுன்னே 
கருக்குழியை   நிறைப்பாயா 
என்அவப்பெயரைத்   துடைத்திடவே 
அம்மா  என்றழைப்பாயா.  
                          
                  

    

வியாழன், 12 ஜூலை, 2012

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு .



 

 

 

 

 

 

  ஊசிமுனை  இடம்கூட    

கிடையாது  என்றுசொல்லி 

வேசிமகன்  சிங்களனும்  

விரட்டுகிறான்  நம்மினத்தை 

 

வெந்தபுண்ணும்  ஆரும்முன்னே 

வேல்வந்து  பாய்ந்ததுபோல் 

சொந்தநாட்டில்  அகதிகளா 

சோதனைதான்  சாமிகளா 

 

வந்தவரை  வாழவைக்கும் 

வரலாறு  போதுமடா 

கந்தையாகப்   போகுமுன்னே 

கண்விழிக்க   வேணுமாடா 

 

 நிலமழித்து  நம்மினத்தை 

நிர்மூலமாய்  செய்ததுபோல் 

வளமழிக்க  அணையெடுத்து 

வன்முறைகள்   புரிகின்றார் 

 

காவிரியும்  கானல்நீராய் 

காணாமல்  போனதுபோல் 

நீர்விரியும்  பாதையெல்லாம் 

நெடுஅணைகள்   எழுந்திடுமோ 

 

கேரளமும்  வஞ்சனையால் 

கேடுகளைச்  செய்திடுமோ 

கேடுகெட்ட  காங்கிரசு 

கேள்விகளைக்  கேட்டிடுமா 

 

பாடுபட்ட   எம்மினமே 

பட்டதெல்லாம்  போதுமடா 

சூடுபட்ட  தமிழினமே 

சுரந்துயெழ வேணுமடா 

 

இத்தாலி   அறுந்ததிற்கு 

இத்தனை  தாலிகளா

அத்தாலி  ஆட்சியிலே 

அணைகளெல்லாம்  வேலிகளா 

 

விழித்திடுவாய்  தமிழினமே 

வாய்க்கரிசி  போடுமுன்னே 

ஒழித்திடுவீர்  ஒன்றிணைந்து 

உதவாக்(கறை)கரை  காங்கிரசை .