வெள்ளி, 31 அக்டோபர், 2014

அறிவு




அறிவு
கால்நடைகளை
மேல்நடைகளாக்கிய‌
காலதேவனின்
மந்திரக்கோல்
பகுத்தறியத் தெரிந்து
படைப்புகள் போற்றவேண்டிய‌
பண்பட்ட தெய்வம்
எட்டும்வரை வகைபடுத்தப்பட்ட‌
ஏற்றம்தந்த ஏணி
அனுபவச் சாலையின்
ஆற்றல்மிகு ஆசான்
ஆசைமேகங்களால்
அடிக்கடி மறையும்
அழகிய அம்புலி
உச்சத்தை எட்டிவிடின்
ஒளிவெள்ளம் பாய்ச்சும்
ஒப்பற்றச் சூரியன்
சிந்தனைக் குளத்தினில்
செழுமைகள் சேர்ந்தால்
அன்றன்று மலரும்
அபூர்வ‌ ஆம்பல்
அன்பென்ற நாரில்
அழகாகக் கோர்த்தால்
என்றென்றும் வாடா
எழிலான மாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக