செவ்வாய், 26 மே, 2009

காற்று

கண்ணிற்குத் தெரியாத
கடவுளின் மூச்சு

தென்றலாகத் தீண்டினால்
தேமதுரக் காதலன்

புயலாகச் சீறினால்
புறப்பட்ட காலன்

மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு
தூது செல்லும் மன்மதன்

காலச் சக்கரம் சுழன்றிட
இதுவுமோர் காரணி

உடல் என்ற கூட்டில்
உலவிவரும் ஞாநி

இசை என்ற இன்பத்தை
ஏந்தி வரும் தோணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக