செவ்வாய், 26 மே, 2009

உடன் பிறப்புகளே

இனப்பெருக்கம் செய்யவந்த
இந்தியப் பறவைகள் அல்ல நாங்கள்
இல்லங்கள் செழிப்பதற்காக இங்குவந்த நாங்கள்
ஆசைக் கனவுகள் ஆயிரம் சுமந்து
ஆறாயிரம் வெள்ளியை முகவரிடம் ஈந்து
அன்னை தந்தை அன்புமார் பிரிந்து
சுற்றமும் நட்பும் கண்ணீர் சொரிந்து
சுலக் கருப்பனுக்கு முடிகாணிக்கை நேந்து
சிங்கைநகர் வந்தோம் சிறகுகளைப் பிரிந்து
வாங்கியக் கடனுக்கு ஓராண்டு
வட்டிக் கடனுக்கு ஓராண்டு
ஒப்பந்தக் காலம் ஓராண்டு
ஒத்துக் கொள்கிறோம் ஒவ்வொரு ஆண்டும்
அக்காவிற்குத் திருமணம் ஐம்பத்தோரு சவரனும்
அடுத்தது தங்கைக்கு அதுபோல தரவேணும்
இல்லத்திலே மகிழ்ச்சியென்றால்
உள்ளம் இங்கே களித்திடும்
உறவுகளுக்குத் துன்பமென்றால்
உள்ளமது வலித்திடும்
உறவுச் சிலுவைகளை உள்ளத்தில் சுமந்து
உழைக்க வந்த உடன்பிறப்புகளே
ஒருவகையில் பார்த்தால்
நீங்கள்கூட இயேசுநாதர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக