வியாழன், 18 ஜூன், 2009

ஆர்

அலைகடல் தாலாட்டும் புதுவையிலே
ஆர்என்ற தேன்கூட்டில் அருந்தமிழே
அழகாக ஓன்றிணைந்து செந்தமிழை
ஆராய்ந்து தருகிறார்கள் நம்தமிழை
ஆண்டொருமுறை சங்கமிக்கும் அருட்ச்சோலை
வண்டுகளாகி உண்டுகளிக்கும் தமிழ்ப்பாலை
பாவேந்தர் பா வடித்த பூமியிலே
பாரதியும் நடைபயின்ற பாண்டியிலே
பார் போற்ற பைந்தமிழன் தேரினிலே
ஆர் ஆகிப்பாய்கிறது வேரினிலே
அறவாணர் தோற்றுவித்த ஆரினிலே
அறம்போல தழைக்கவேண்டும் பாரினிலே
ஆசிரியரும் மாணவரும் நேரினிலே
ஆய்ந்து வந்து தருவார்கள் ஆய்வினிலே
புடம் போட்டு வார்த்தெடுக்கும் பூந்தமிழை
வடம் பிடித்து இழுக்க வாரீர் புதுவையிலே
யார் யாரோ வந்தாரே மண்மேலே
பேர் வாங்கிச் சென்றாரோ விண்மேலே
அருகு போல் வேரோடிய நம்தமிழை
சிறகுகளைச் செப்பனிடும் ஆர்சாலை
ஆறு என்றால் சங்கமிக்கும் கடலினிலே
கடல் கூட பொங்கநினைக்கும் ஆரினிலே
ஆறில்லா ஊருக்கு அழகு பாழா
ஆய்வரிந்து காக்கட்டும் ஆர் அமைப்பு வாளா .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக