திங்கள், 22 ஜூன், 2009

தீபாவ(லி )ளி

இனிக்க வில்லை இன்பத் தீபாவளி
இந்திய இதயங்களில் இவ்வருடம் தீராதவலி
இமயத்தின் எல்லைகளில் ஏனோ இத்தனை உயிர்பலி
உயிர்களை இழந்தவரும் உடைமைகளைத் தொலைத்தவரும்
உறுப்புகள் அறுந்தவரும் உயிருடன் புதைந்தவரும்
நிலமகள் நடுக்கத்தால் நித்திரையில் கூட மரண ஒலி
பாக் எல்லைகளும் பயங்கரவாதப் பள்ளிகளும்
பாவமறியாத பச்சிளங்கிள்ளைகளும்
பகுத்துண்ட பகுதியிலே காலன் தொகுத்துண்டு போனதுவோ
இத்தனை இன்னல்களிலும் இருகரம் நீட்டிய
இந்திய நெஞ்சங்களை இடைநிறுத்தி
இறுமாப்பு காட்டியது பயங்கரவாதத்தை மட்டுமே
பாடமாகக் கொண்ட பாகித்தானியக் களை
குலுங்கி நிறுத்திய குங்கும நெற்றியில்
கூட்டம் நிறைந்திட்ட தலைநகர் டெல்லியில்
குண்டுகள் வெடித்ததால் குழப்பங்கள் நிறைந்ததால்
சாய்ந்தன சில உயிர்கள்குருதிச் சகதியில்
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட
வாழ்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
பிரிவினை வாதத்தைப் பிற்போக்கில் தள்ளிவிடு
அன்பாக வாழ்ந்திடுவோம் இனியாவது தோள்கோடு
இனி நேரவேண்டாம் இதுபோன்றதொரு ப(லி)ழி
அப்போது ஏற்றிடுவோம் தீபமெனும் திவ்ய ஓளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக