திங்கள், 29 ஜூன், 2009

தேசிய நாள் .

தேசியநாள் தேசத்தில் உரிமைகள் பேசியநாள்
தேசத்தில் சுதந்திரத் தென்றல் வீசியநாள்
சுதந்திரம் என்பது பரிணாம வளர்ச்சி
சூரியக்குடும்பமும் அதற்கோர் சாட்சி
கோள்கள் பிரிந்து ஐந்நூறு பில்லியன் ஆண்டுகளாயின
கோள ஆய்வுகள் புள்ளிவிபரங்கள் சொல்லின
மானிடம் தழைத்திட யுகங்கள் பலநூறு கடந்தன
மானமது பிறந்திட மறைகளும் தோன்றின
ஆணவப் பேய்களும் அரியணை ஏறின
அகந்தையின் தலைமையில் அரசாங்கம் அமைத்தன
அடிமை சாசனத்தை ஆயுள்வரை வளர்த்தன
அடங்கி பணிசெய்ய ஆணைகளும் பிறந்தன
ஒடுங்கிய கூட்டமெல்லாம் ஓர்நாள் கிளர்ந்தன
நடுங்கிய நாட்களெல்லாம் விடைசொல்லி நகர்ந்தன
சிந்தியக் குருதியில் தேசங்கள் நனைந்தன
முந்திய தலைமுறைகள் முகவரிகள் தந்தன
சுதந்திரத் தென்றல் சுகந்தமாக வீசின
சுற்றிவரும் பூமிகூட சொந்தக் கதை பேசின
சுயநலம் அற்றவர்கள் தலைவர்கள் ஆகினர்
பயநலம் அற்றவர்கள் தியாகிகள் ஆகினர்
சுதந்திரம் என்பது பரிணாம வளர்ச்சி
பரிணாமம் என்பது படிப்படி முயற்சி
பரந்தாமனும் எடுத்த அவதாரப் புரட்சி
பாமரனின் வாழ்விலும் பாசமுள்ள உணர்ச்சி
தேசியநாள் என்பது தேசத்தின் மகிழ்ச்சி
பேசியநாள் எல்லாம் தேகத்தில் கிளர்ச்சி
போற்றிக் காக்கவேண்டிய பொன்னான வளர்ச்சி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக