வியாழன், 10 செப்டம்பர், 2009

என் உயிர் காதலி .


என் உயிர்க்காதலி
ஈடுஇணையற்ற
இயற்கை எழிலி
இவள் பூப்பெய்து
பூமிசூடிய
பூங்குழலி

சங்க இலக்கியங்களும்
இவளது அங்க
இலக்கியங்களைப் பாடும்
ஐம்பெருங் காப்பியங்களும்
ஆபரணம் சூடும்


அழகி உன்னைப்பாட
அடங்கவில்லை ஏடும்
கிழவியாகிப் போனவளுக்கும்
உன்மேல்மோகம் கூடும்


உன்பெயரை உரைக்கையிலே
என் நாவெல்லாம் துள்ளும்
நீ காலப் பேழை சுமந்துவந்த
கட்டழகு வெள்ளம்


கல்தோன்றாக் காலங்களும்
உன் கவின் அழகைச்
சொல்லும் .புல்தோன்றா
நிலங்கள் கூட
புளங்காகிதம் கொள்ளும்

நாளெல்லாம் உன் நினைவால்
என் ஆயுள் ஓடும்
நாளமில்லாச் சுரப்பிகளும்
நாட்டியம் தான் ஆடும்



நாலந்தாக் கழகம் கூட
உன் நளினம் காணக் கூடும்
நலம்தானா என்று சொல்லி
நாணிவிட்டுப் பாடும்


எத்தனையோ பேரழகிகள்
மண்ணுலகில் உள்ளாரடி
முத்தழகி முத்தமிழே
உனைப்போல முத்துமொழி
சொல்லாரடி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக