வியாழன், 10 செப்டம்பர், 2009

நீர் நீரே .

ஆழியிலே முகந்து ஆகாயம் சுமந்து
அலைகாற்றில் நகர்ந்து அழகாகச் சேர்ந்து

மழையெனவேப் பொழிந்து மண்மீது விழுந்து
மரம்கொடிகள் நனைந்து மனிதருக்கும் உகந்து

மலைமீதும் தவழ்ந்து மடுநோக்கிச் சரிந்து
நதியெனவே நடந்து நளினமாக வளைந்து

நாடுநகரம் கடந்து நாகரீகம் நிறைந்து
தனித்தன்மை இழந்து தன்முகத்தை மறந்து

தப்பியது உலர்ந்து தாய்மடியை அடைந்து
தன்கவலைகள் மறந்து தரணியிலே சிறந்து

உலகு துய்க்க வந்த நீரே
உயிர்கள் இருப்பதின் காரணம் நீரே .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக