சனி, 20 மார்ச், 2010

பெண்ணின் பெருமை .

முறத்தாலே துரத்தினாளாம்
முன்னாளில் பெண்ணொருத்தி
புறங்காட்டி ஓடியதாம்
புலியதுவும் உயிர்வருத்தி


தன்னுயிரைக் காத்திட்ட
தமிழச்சி வரலாறு
மண்ணிலே இன்றுவரை
மங்காதப் புகழாக


அந்நாளின் பெருமைதனை
அடியோடு தகர்த்தெறிய
இந்நாளில் புறப்பட்ட
இளநங்கை சுகந்தியவள்


பள்ளிசென்ற வாகனமும்
பள்ளத்தில் விழுந்திடவே
துள்ளிச்சென்று ஓடிவிட்டார்
துயரறியா ஓட்டுனரும்


முடிந்தவரைப் போராடி
மூச்சடக்கி நீர்தேடி
மழலைகளை காத்துச்சென்ற
மாண்புதனை என்னசொல்ல


உள்ளங்களிலே உறுதிகொண்ட
உனைப்போன்ற பெண்களாலே
பெண்ணினத்தின் பெருமையெல்லாம்
பெயர்பெற்று வாழுமடி


கண்ணியத்தின் கடவுளாக
கடைசிவரை போற்றுமடி
கண்களிலே நீர்கசிந்து
காலடியில் வீழுமடி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக