செவ்வாய், 25 ஜூன், 2013

பெரும்பி(ம)ழை








 பெரும்பி(ம)ழை


மேகமது வெடிப்புண்டு
மேவியதோ மாமழையும்
தாகமதைத் தீர்த்திடவே
தரணியிலே மழைபொழியும்

தேகமதில் மூன்றுபங்காய்
தேக்கிவைத்த நீரதனை
யாகமது  வளர்த்திங்கு
யாசகமும் செய்கின்றோம்

மோகமது கொண்டிடவே
கருக்கொண்ட முகில்கூட்டம்
யூகமது இல்லாமல்
உதிர்த்த‌தன்றோ உத்ரகாண்டில்

வேகமாகப் பாய்ந்துவந்த
வேங்கையான வெள்ளத்தினால்
வேதனையாய் மக்களெல்லாம்
வியனுலகை எய்துவிட்டார்

விதியிதுவா எண்ணிடுவீர்
வாழுகின்ற மானிடமே
நதிகளெல்லாம் ஒன்றிணைத்து
நாடெங்கும் பாய்ச்சிவிட்டால்


சதிஇதுபோல் நடந்திடுமா
சங்கரனைப் பழித்திடுமா
மதியுகமாய் மண்ணுலகில்
நதிகளெல்லாம் ஒன்றிணைப்போம்

மறுபடியும் மழைபொழிந்தால்
மரணமதின் நடையடைப்போம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக