அடைகாத்தாய்
உடற்சூட்டை உள்ளிறக்கி
அடைகாக்கும் உயிர்கோழி
இடர்பாட்டை எதிர்கொண்டு...
எழுச்சிகண்டாய் நீ வாழி
இருபத்தியொரு நாளில்
குஞ்சுகளைப் பொரித்திடுமாம்
இருபத்தியொரு நாளில்
மீண்டுவந்தாய் சரித்திரமாய்
ஊழலென்னும் வழக்கிற்கா
உன்னையவர் அடைத்துவைத்தார்
உத்தமரா உண்மையிலே
உன்மேலே வழக்குரைத்தார்
காலமம்மா கலங்காதே
கலிகாலம் அப்படித்தான்
தங்கத்தையே தரம்பார்க்க
உரசிடுவார் இப்படித்தான்
புடம்போட்டத் தங்கமென
புதுப்பொழிவாய் வந்திடுவாய்
தடம்பதித்துத் தரணியிலே
தங்கத்தாரகையே மின்னிடுவாய்.
.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக