செவ்வாய், 21 அக்டோபர், 2014








      ஒளிவிளக்கு


     இல்லாமை இருள்நீங்கி
     இல்லத்திலே பொருள்நிறைய‌
     கல்லாமைக் காரிருளில்
     கல்வியெனும் மழைபொழிய‌


     வெள்ளாமை வயல்நிறைய‌
     விஞ்ஞானம் வானுயர‌
     பொல்லாமை நீங்கிடவே
     பூமியெங்கும் செழித்திடட்டும்
    
    
     கொல்லாமை நன்றென்னும்
     கொள்கையினைப் பற்றிடவே
     வல்லானைக் கண்டிடலாம்
     வானுயரச் சென்றிடலாம்


     கள்ளாமை அரக்கனெனும்
     கசடுகளும் அழிந்திடவே
     இந்நாளில் ஏற்றிடுவோம்
     இன்பமெனும் திருவிளக்கு

     எந்நாளும் எரிந்திடட்டும்
     இதயமதில் ஒளிவிளக்கு 


    அனைவருக்கும் என் இதயங்கனிந்த‌
    தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துகள்
                      வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக