திங்கள், 25 மே, 2009

காலக் கருவறையில்

காலக் கருவறையில் கண்மூடிக்கிடப்போம்
ஞாலக் கவியாலே பலகவிகள் வடிப்போம்

நீலக் கடல்வானின் நிலவொளியைக் குடிப்போம்
வாழப் புவிமேலே சிலவேளை நடிப்போம்

சோலைக் குயில்போல சோகங்கள் மறப்போம்
சேலைக் குயில்களுக்கும் புதுராகம் படைப்போம்

வாழைக் கன்றாகவா நம்வாழ்வை அமைப்போம்
பாலைச் சோலையிலே பசுந்தளிராய் பூப்போம்

நாளைக்கு மூன்றுவேளை வயிறாரப் புடைப்போம்
வேளைக்குக் கிடைக்காவிடில் வேதனையில் துடிப்போம்

காலைக் கதிரவனைப் போல் கடமைக்காக உதிப்போம்
மாலைக்கு ஏங்குகின்ற மடமைகளைத் துதிப்போம்

ஈழத்துக் கருவறையில் ஒருமுறையேனும் தரிப்போம்
வேரற்ற நம்மினத்து வேதனையை உரிப்போம்

போரற்ற புதுஉலகை புன்னகையால் திறப்போம்
யாரற்றுப் போனாலும் நாம் புதிதாய்ப் பிறப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக