திங்கள், 25 மே, 2009

இரவின் நிழல்கள்

இயங்கிக் களைத்தப் பூமிக்கு
இயற்கைச் சூடிய இருள்போர்வை
இரவினில் பூத்த வெள்ளிகளோ
நிலவினில் உதிர்ந்த பால்வியர்வை
உழைத்துக் களைத்த மனிதருக்கு
இரவின் நிழலேதரும் நிறைவை
இரையைத் தேடியப் பறவைகளும்
இரவினில் அடைந்திடும் அதனுறவை
உறவைப் பிரிந்திடும் உள்ளங்களும்
முள்ளாய் நினைத்திடும் நிழல்யிரவை
பிரிவைத் தாங்கிடும் உள்ளங்களும்
வெல்ல நினைக்கும் அதன்வரவை
பகலிலும் நிழல்கள் வருவதுண்டு
பார்வையில் அவைகள் நிலைப்பதில்லை
இரவின் நிழல்களில் இயக்கமுண்டு
அவை எப்போதும் மனங்களில் நிலைப்பதுண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக