திங்கள், 25 மே, 2009

புல்லாங்குழல்


துவாரங்களாய்த் துளைத்தாலும் துன்பமில்லை உனக்கு
துவாரகையின் துயில்கலைத்த பங்குஉனக்கிருக்கு
துளிர்க்கும்போது உன்மேனி சொந்தமில்லை உனக்கு
தூதுவனாய் காற்று வந்தால் கவிபடிப்பாய் அனைத்து
புல்லாகிப் போனபோது பூக்காத உன்மேனி
புண்ணாகிப் போனாலும் புன்னகைக்கும் புதுஞானி
வில்லாகிப் போனபோது பாடாத இசைத்தேனீ
கல்லாகிப் போனவரையும் கரைத்துவிடும் கவிஞானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக