புதன், 18 நவம்பர், 2009

புயலான பூ.


கொடிகளில் பூத்து
கொய்து தொடுத்த
கொற்கை மலரல்ல


கொடியிடைக் கண்ணகி
கொற்றவை சூடிட
கோபமும் இதற்கில்லை


பணிந்த கால்களில்
அணிந்த போதும்
துணிந்திட மனமில்லை


நிலைகெட்ட போதிலும்
விலையிட்ட நிலையிலும்
வேதனை கொண்டதில்லை


உயிர்கொண்டு போனதால்
மயிர்கலைந்த மையினால்
ஏந்திய வேளையிலே


மகரந்தப் பரல்களாய்
மாணிக்கம் சிதறையில்
புயலான புரட்சிப் பூ

காப்பிய வடிவினில்
காலங்கள் போற்றிடும்
கண்ணகி காற்சிலம்பு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக