புதன், 18 நவம்பர், 2009

கோழிக் குஞ்சு



தாய்க்கோழி இறகுகளின் தகதகக்கும் வெப்பத்தில்
போய்ஒளிந்து மூடிகொண்டு போர்வையென அணிந்தாயே

உடற்சூட்டை உள்ளிறக்கி உனக்காக தனைஉருக்கி
இடர்பட்டக் கதையெல்லாம் இதுவென்று அறிவாயா

இருபத்தி யொருநாளும் இளைத்தகதை உணர்வாயா
இனவிருத்தி இதுவென்று இடர்பாட்டை மறவாயா


பருந்தோடு சண்டையிட்டு புண்பட்ட உன்தாயும்
பிரிந்தோடு என்றுசொல்லி பிரிக்கும்கதை தெரிவாயா

விரைந்தோடும் இவ்வுலகில் வேதனைக்குப் பஞ்சமில்லை
மறைந்தோடும் மண்ணுலகின் மகத்துவம் இதுவென்று

மனதார ஏற்றுநீயும் மகிழ்வுடன் வளர்வாயா
மனம்தளரா இளநெஞ்சே மரணத்திற்கும் இனியஞ்சேல்

கொத்திவிரட்டும் தாய்க்கோழி கோபமல்ல சிறுகுஞ்சே
புத்திபுகட்டும் உனக்காக புத்தனைப்போல் தாய்நெஞ்சு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக