ஞாயிறு, 13 நவம்பர், 2011

பார்வை .


கொங்கை வனப்பதனில்
கோடிஇன்பம் கண்டிருந்தேன்

முல்லை இவளல்லோ
மோகத்தீ மூட்டினாளே

கள்ளைக் குடித்ததுபோல்
கலவிடவே ஆவல்கொண்டேன்

தொல்லை கொடுத்தாளே
தொலைவில் அவள் இருந்தாலும்

நெல்லைத் தூற்றியதால்
பறந்துவந்த பதரதுவும்

வெள்ளை விழியதனை
வேதனையில் ஆழ்தியதே

பிள்ளைப் பாலூற்ற
பிரிந்திடுமாம் வலியெல்லாம்

பல்லை இளித்துநானும்
பார்த்த அந்தப்பார்வையெல்லாம்

எல்லை தாண்டிடவே
எதார்த்தம் விளங்கியது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக