ஞாயிறு, 13 நவம்பர், 2011

தீக்குச்சி .


அழிவி்ற்காகவே அடைக்கப்பட்ட
ஆச்சர்யக்குறிகள்

ஒற்றைக்காலில் படுத்துறங்கும்
ஒசாமா பின்லேடன்கள்

சிரசுகள் உரசப்படும்போதெல்லாம்
தீக்குளிக்கும் பே(சீ )தைகள்

கந்தகச்சுமை தலைக்கேறியதால்
கரியாகிப்போகும் கடன்காரன்கள்

க(இ)ல்லாத குழந்தைகளின்
களவாடப்பட்ட விரல்கள்

வரங்கள் சாபங்களானதால்
நிறங்கள் மாறிய மரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக