ஞாயிறு, 26 மே, 2013

அஞ்சலி



அஞ்சலி

சிங்கநாதக் குரலொலியில்
சங்கநாதத் தமிழ்முழங்கும்
வெங்கலத்துச் சுடராகி
வேணுகானம் இசைத்தமகன்

பொங்கிவரும் புணல்அழகாய்
பொதிகைமலைத் தமிழழகாய்
எங்கெங்கினும் ஏழிசையால்
இசைத்தமிழை வளர்த்தமகன்

சுந்தரமாய் தமிழ்புழங்கி
மந்திரமாய் அதில்விளங்கி
சந்ததிகள் கடந்திடினும்
சரித்திரத்தை விதைத்தமகன்

பரமனுக்கும் குரல்கொடுத்தாய்
பாமரனின் துயர்படித்தாய்
வாமனனாய் உருவெடுத்து
வையகத்தில் இடம்பிடித்தாய்

எந்திரமாய் போனவரையும்
இளக்கிவிடும் குரலழகா
இங்கிருந்து போனதேனோ
இசைத்தமிழும் உரு(அழு)குதய்யா.


இறைவனடி சேர்ந்தவருக்கு 
இதயம் கனிந்த அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக