ஞாயிறு, 24 மே, 2009

கண்ணீர் தேசம்



கண்ணீரைச் செந்நீராகச் சிந்துகின்ற கண்ணீர்தேசம்
குண்டுமழை பொழியும் குருதிப்புனலில் நனையும்தேசம்
ஆதிகாலம் முதல் அண்மைய காலம்வரை
அக்கிரமங்கள் நடக்கும் அநியாயதேசம்
சீதையை சிறைஎடுத்ததால் சீரழிந்த சிருங்காரதேசம்
நீதியை நிலைநாட்ட நிர்மூலமாகி வரும்தேசம்
உரிமைகள் மறுக்கப்பட்டதால் உக்கிரமானது எங்கள்நேசம்
தமிழனுக்குக் கிடையாத தன்னுரிமை வாசம்
ஒப்பணைக்கு ஒப்பாரிவைக்கும் ஓநாய்களின் வேசம்
ஊமைகளாகிப் போகினவோ உலகநாடுகளின் பாசம்
கந்தகக் கருக்கலை கருவறையில் சுமக்கும் கலியுகப்பெண்கள்
மனித வெடிகுண்டாகி மாண்டுபோகும் மானுடத்து மான்கள்
மண்ணுரிமைக்காக நித்தமும் நடக்கின்ற உயிர்பலி
உடல்சிதறி உயிர்நீத்திடும் விடுதலைப்புலி
உண்மையை உரைத்திட அனைவருக்கும் கிலி
உத்தமர்கள் உள்ளத்தில் மட்டுமே ஏற்படும்வலி
என்று பிறக்கும் எங்கள் வாழ்வுக்கு வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக