கடமைகளை முடித்தோம் கஞ்சியினைக் குடித்தோம்
கழப்பைதனை எடுத்தோம் கழணி சென்று உழைத்தோம்
வெய்யிலும் வந்தது வியர்வையும் உதிர்ந்தது
மாலையும் வந்தது மனதும் சோர்ந்தது
மாடுகளைப் பூட்டினோம் மனைசென்று மயங்கினோம்
மகன் ஒருவன் ஓடிவந்தான் மடியில் அமர்ந்து பாடுஎன்றான்
மனையாள் அவள் ஓடிவந்தாள் மகனைதூக்கி அரவணைத்தாள்
உணவு கொடுத்து உறங்க வைத்தாள்
உறவைத் தொடரஉளமுடன் வந்தாள்
பஞ்சனை தனைவிரித்தாள் மஞ்சத்திலே திளைத்தாள்
வாழ்க்கை என்பது இதுதானோ வாழ்ந்து பார்த்தால் சுவைதானோ
புலர்ந்தது பொழுது புறப்பட்டோம் புன்னகையுடன்
பொன்னான வாழ்வைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக