ஞாயிறு, 24 மே, 2009

பொன்னான வாழ்வைத்தேடி

காலையில் விழித்தோம் கதிரவனைத் தொழுதோம்
கடமைகளை முடித்தோம் கஞ்சியினைக் குடித்தோம்
கழப்பைதனை எடுத்தோம் கழணி சென்று உழைத்தோம்
வெய்யிலும் வந்தது வியர்வையும் உதிர்ந்தது
மாலையும் வந்தது மனதும் சோர்ந்தது
மாடுகளைப் பூட்டினோம் மனைசென்று மயங்கினோம்
மகன் ஒருவன் ஓடிவந்தான் மடியில் அமர்ந்து பாடுஎன்றான்
மனையாள் அவள் ஓடிவந்தாள் மகனைதூக்கி அரவணைத்தாள்
உணவு கொடுத்து உறங்க வைத்தாள்
உறவைத் தொடரஉளமுடன் வந்தாள்
பஞ்சனை தனைவிரித்தாள் மஞ்சத்திலே திளைத்தாள்
வாழ்க்கை என்பது இதுதானோ வாழ்ந்து பார்த்தால் சுவைதானோ
புலர்ந்தது பொழுது புறப்பட்டோம் புன்னகையுடன்
பொன்னான வாழ்வைத்தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக