ஞாயிறு, 24 மே, 2009

ஆழிப்பேரலை

ஊழி பெருத்ததோ
உலகை உய்த்ததோ
ஆழி கிளர்ந்ததோ
அலைகளால் அழிந்ததோ
காளி பிறந்ததால்
தாலிகள் அறுந்ததோ
வேள்விகள் அழிந்ததால்
வேலிகள் உடைந்ததோ
சாதிகள் தெரிந்ததா
பிணசாதிகள் பார்க்கையில்
கேள்விகள் பிறந்ததோ
கேண்மைகள் புரிந்ததோ
இதுதானா இயற்கை
எப்போதுதீரும் இதன்வேட்க்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக