ஞாயிறு, 24 மே, 2009

வரலாறுடைத்த வள்ளல்



இனக்கொடியை அறுத்தெடுக்க
இணையும் இரக்கமற்றவர்களின்
வன்கொடுமையை தாளாமல்
தன் குலமக்களின் அழிவை எண்ணி
உண்ணாமல் உறங்காமல்
உயிர்த்த முத்தே
முல்லைக்கொடிக்கு தேர்கொடுத்த
வள்ளலின் வரலாறுடைத்து
முல்லைத்தீவே வாடிவரும் வேளையில்
உன் உயிரை கரியாக்கி வான் சென்ற வித்தே
உன் கொளுந்துவிட்ட தேகத்தில்
எழுந்து சுட்ட தீயாவது
மழுங்கிவிட்ட இதயங்களை உலுக்கட்டும்
நம் மானமுள்ள இனத்தின் பாதை திறக்கட்டும்
இருகிவிட்ட என்கண்ணில் ஈரமது கசியவில்லை
கருகிவிட்ட உன்னை எண்ணி கை வடித்த கண்ணீர் இது.


குளத்தூர் முத்துக்குமார் தீக்குளித்துத் தன் இன்னுயிரை தியாகம் செய்தஅன்று எழுதிய அஞ்சலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக