ஞாயிறு, 5 ஜூலை, 2009

சுமை

என்னைச் சுமந்தவள்
காலமாகிப் போனால்
என்னைக் கரைத்துக்
கொண்டிருக்கிறது காலம்
நான் அவளைச் சுமந்தபடி .

தழும்பேறிய உன்கைகளால்
களிம்பிடும் கணங்களில்
தழும்பிடும் கண்ணீரால்
கரைந்திடும் என்சுமை.


கரைந்தோடும் கண்ணீரால்
கலங்கிடும் உன்நெஞ்சில்
கணமேனும் குறையுமா
நீ பட்ட வேதனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக