
அமாவாசை .
வெண்ணிலவை விரல்காட்டி
அன்னையவள் சோறு ஊட்ட
பார்க்க வைத்து உண்டாதாலே
பால்நிலவும் பொலிவிழந்து .
பவுர்ணமி .
பொலிவிழந்த வெண்ணிலவும்
பொறுக்கித்தின்றப் பருக்கையினால்
வலுவடைந்து வந்துவிட்டான்
வானத்திலே பவுர்ணமி .
இயற்கைச் சக்கரம் இயல்பென சுழன்றிட வாழ்க்கைச் சக்கரம் ஓர்நாள் கழன்றிடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக