புதன், 27 மே, 2009

சிறைப்பறவை

உடல் கூட்டில் தங்கிச் செல்லும் உயிர்ப்பறவை
உடல்விட்டு பறக்கையில் நினைக்குமா தன்உறவை
தான்கட்டா கூட்டிலே தவமிருக்கும்
தனக்காக மட்டுமே சிறகுவிரிக்கும்
கூட்டோடு சேர்ந்துமே குணம்வளரும்
கூடுகையில் ஆர்ந்துமே தினம்புலரும்
ஆண்பறவை ஆனாலும் முட்டையிடும்
அடைகாத்து எண்ணங்களை எட்டிவிடும்
தான் இருக்கும் வரையில்தான் கூடுஇருக்கும்
வான் பறக்க நினைக்கையிலே கூடு இறக்கும்
பார்வைக்குத் தெரியாமல் பறந்துதிரியும்
பார்த்தவர் யார் என்றால் எண்ணம்விரியும்
ஆம்பலின் இலைநீர்போல ஒன்றிவாழும்
சாம்பலாகிப் போனாலே அன்றிவீழும்
உடல் கூட்டில் தங்கிச்செல்லும் அறைப்பறவை
உடல் விட்டுநீந்திச் செல்லும் சிறைப்பறவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக