புன்னகையை இதழ்களில் பூத்திருப்போம்
மண்பகையை மனங்களில் துடைத்தொழிப்போம்
பூக்களில் வண்டாகித் தேனேடுப்போம்
பாக்களால் விண்டேகி வான்துடைப்போம்
காற்றிடம் காதலின் நயம் படிப்போம்
ஆற்றிடம் நாணலின் மடிகிடப்போம்
பறவையின் சிறகாகி படபடப்போம்
புரவியின் உறவாகி புவிகடப்போம்
மழலையின் வடிவாக மனம் அமைப்போம்
குழலையும் யாழையும் குணம் அமைப்போம்
சிந்தனை உளிகளால் சிலைவடிப்போம்
நிந்தனை செய்தாலும் கலைபடைப்போம்
கவலை விறகுகளை அடுப்பெரிப்போம்
திவலைச் சூரியனாய் சுட்டெரிப்போம்
இதயக் கதவுகளைத் திறந்துவைப்போம்
உதய நினைவுகளை விருந்து வைப்போம்
எப்போது சுயநலத்தை நாம் மறப்போம்
அப்போது புதிதாய் நாம்பிறப்போம்
மண்பகையை மனங்களில் துடைத்தொழிப்போம்
பூக்களில் வண்டாகித் தேனேடுப்போம்
பாக்களால் விண்டேகி வான்துடைப்போம்
காற்றிடம் காதலின் நயம் படிப்போம்
ஆற்றிடம் நாணலின் மடிகிடப்போம்
பறவையின் சிறகாகி படபடப்போம்
புரவியின் உறவாகி புவிகடப்போம்
மழலையின் வடிவாக மனம் அமைப்போம்
குழலையும் யாழையும் குணம் அமைப்போம்
சிந்தனை உளிகளால் சிலைவடிப்போம்
நிந்தனை செய்தாலும் கலைபடைப்போம்
கவலை விறகுகளை அடுப்பெரிப்போம்
திவலைச் சூரியனாய் சுட்டெரிப்போம்
இதயக் கதவுகளைத் திறந்துவைப்போம்
உதய நினைவுகளை விருந்து வைப்போம்
எப்போது சுயநலத்தை நாம் மறப்போம்
அப்போது புதிதாய் நாம்பிறப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக